பொது பலசேனாவின் பொது வேட்பாளர் ஜனாதிபது மஹிந்த ராஜபக்ஷவா?

னாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கான சகல தகுதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருக்கின்றது என்று பொது பலசேனா அறிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பொதுசெயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதுவரையிலும் செய்த சேவைகளை பார்க்கும் போது பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு அவருக்கே தகுதியிருக்கின்றது.

தான் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு இன்னும் காலமிருப்பதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா, யாரை ஆதரிக்கும் என்பது தொடர்பில், எதிர்க்கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :