அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் நீண்டகாலமாக ஆசிரிய ஆலோசகர்களாகப் பணியாற்றி ஓய்வுபெறுகின்ற கல்வியாளர்களுக்கான பிரியாவிடை வைபம் நேற்று(08.10.2014) இரவு பொலநறுவையிலுள்ள விலேஜ் உல்லாச விடுதியில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல்.எம். காசீம் தலைமையில், பிரதிக் கல்விப்பாளர் ஏ.எஸ். அகமட் கியாஸ் அவர்களின் நெறியாள்கையின் கீழ் மிகவும் சிறப்பானமுறையில் இந்நிகழ்வு நடந்தேறியது.
இதில், ஓய்வுபெற்றுச் செல்கின்ற முறைசாரக் கல்வி ஆசிரிய ஆலோசகரான அல்ஹாஜ். என்.சம்சுதீன், சமூகக்கல்விப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் எம்.எல்.எம்.இப்றாகீம், ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். இப்றாகீம் ஆகியோருக்கு பொன்னாடை, பொற்கிழி, நினைவுப் பரிசுகள் என்பன வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர். இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர், அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய கோட்டங்களின் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பொத்துவில் உப கல்வி வலயத்தின் பணிப்பாளர் ஏ. அப்துல் அஸீஸ், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கி, நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்ட ஆசிரிய ஆலோசகர்கள், வலயக் கல்விப்பணிப்பாளர், பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆகியோரையும் நிகழ்வில் கலந்து கொண்ட கல்வி அதிகாரிகளையும் படங்களில் காணலாம்..
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment