தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கமைய அட்டாளைச்சேனை பொது மையவாடி சிரமதானம்



பி. முஹாஜிரீன்-

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கமைய அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பொது மையவாடியை சிரமதானம் மூலம துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று (04) சனிக்கிழமை நடைபெற்றது.

அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிரமதானப் பணியினை ஆரம்பித்து வைத்து சிரமதானப் பணியில் ஈடுபட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா உட்பட அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் போன்றோர் இச்சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :