பொத்துவில் பிரதேசத்தில், மழை வெள்ளத்தில் அள்ளுண்டு போகும் கிரவல் வீதிகள்!

எம்.ஏ.தாஜகான்-

பொத்துவில் பிரசேத்தில் பிரதேசசபை நிதிமூலம் புனரமைக்கப்பட்டு, அண்மையில்   பிரதேசசபைத் தவிசாளர் சகிதம் திகாமல்ல பாராளுமன்ற உறுப்பினரால், பெயர்ப் பலகை  திரைநீக்கம் செய்யப்பட்டு. போக்குவரத்திற்காக மக்களிடம்; ஒப்படைக்கப் பட்ட உள்வீதிகளே,  தற்போதுபெய்துவரும் அடைமழையில் அள்ளுண்டுபோயுள்ளது.

கடந்த இருவாரகாலமாக நாட்டின் பல பாகங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 5  மாவட்டங்களில் சுமார் 700 வரையிலான குடும்பங்களைச சேர்ந்த 2500 பேர்வரை நிர்க்கதி  நிலைக்குள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கடந்த 3ஆம் திகதிவரை நாட்டின் 14 மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை  அனர்த்தங்களின்போது, 3 இலட்சத்து 78 ஆயிரத்து 556 குடும்பங்களைச் சேர்ந்த 13 இலட்சத்து,  20 ஆயிரத்து 779 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நால்வர் உயிரிழந்துள்ளதாகவும்  அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித் துள்ளது.

இந்நிலையில், இவ்வீதிகள் அடைமழையில் அள்ளுண்டு போகின்றமை குறித்துக் கருத்துத்  தெரிவித்துள்ள பி-7 கிராமசேவகர் பிரிவு பொதுமக்கள், அவசர அவசர மாகக் கிரவல்   போடப்பட்டு நிரப்பப்படுகின்ற இவ்வீதிகள் அடுத்துவரும் அடை மழையில் நிச்சயம்  அள்ளுண்டுபோகும் எனத்திறப்பு விழாவின்போது, பாராளுமன்ற உறுப்பினரிடமும்,  பிரதேசசபைத் தவிசாளரிடமும் கூறியுள்ளதாகவும் மேலும் தெரி வித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :