பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாநகர சபையினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபையினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக 02.10.2014ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்று வக்பு சபையில் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கடிதத்தில் பள்ளிவாசலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு பள்ளிவாசலின் தலைவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பள்ளிவாசல் அமைந்துள்ள முகவரியிலுள்ள கடிதத்தினை 14 நாட்களுக்குள் அகற்றுமாறும் இந்தக் கடிதத்தில் தெரிவித்தக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசலை மூடுவதற்கு கடும் போக்காளர்கள் கடந்த வருடம் முதல் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையே மாத்தறை மாநகர சபையினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.theindependen
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :