இலங்கையின் சிறந்த அதிபர்களுள் ஒருவராக வெலிகம - மதுராப்புர அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஹி்ப்ளர் (பீ.ஏ) தெரிவு செய்யப்பட்டு விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இன்று கண்டியில் இடம்பெற்ற இலங்கையிலுள்ள சிறந்த அதிபர்களுக்கான விருதுவழங்கும் வைபவத்தின்போது பிரதமர் தி.மு ஜயரத்ன அவர்களினால் அஸ்ஸபா அதிபர் தனக்குரிய விருதினைப் பெற்றுக் கொண்டார்.
அதிபர் எம்.எஸ்.எம். ஹி்ப்ளர் பல வருடங்கள் வெலிகம - கப்புவத்தை அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிவிட்டு அண்மையில் (இம்மாதம்) அஸ்ஸபாவின் அதிபராக பணியேற்றுள்ளார். ஏற்கனவே இவர் பல அரச, மாகாண மட்ட விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment