உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்து

லக முஸ்லிம்கள் அனைவரும் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இவர்களது குறைநீங்கி, நிறை பெருகி நிம்மதியுடனும் நேர்மையுடனும் வாழ இறைவனைப் பிரார்த்தித்து, அவர்களின் மகிழ்ச்சியில் நானும் இணைந்து கொள்கிறேன். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இப்றாஹிம் (அலை) அவர்கள் தனது செல்வப் புதல்வன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுக்கக் கனவு கண்டு, அதனை தியாகத்தோடு நிறைவேற்ற துணிந்த போதே தியாகம் உலகிற்கு எடுத்துக் காட்டப்பட்டது. அதில் அவர் வெற்றி பெற்றார். இவ்வாறு இறுதி நபி (முகம்மது (ஸல்) அவர்கள் வரையும் எல்லா நபிகளும் தியாகத்தின் மூலமாகத்தான் வெற்றி பெற்றனர். அதன் பிரதி பலன் தான் இன்றைய வியாபகமான இஸ்லாமிய உலகு.

தியாகம் என்பது மனிதனோடு இணைந்திருக்கக் கூடிய ஒரு நற்பண்பு தந்தை தியாகம் செய்தால்தான் குடும்பம் செழிக்கும். அரசன் தியாகம் செய்தால் நாடு பெருகும். மாணவன் தியாகம் செய்தால் வெற்றி கிடைக்கும் சமூகத்தின் தியாகம்தான் கூட்டுறவான வாழ்வு.

பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நம்முன்னோர்கள செய்த தியாகமே இம்மண்ணிற்கு உயர்வையும், கௌரவத்தையும் தந்தது. எமது நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை நாம் தியாகத்துடன்தான் வென்றெடுத்தோம். அதேபோல் இன்ஷh அல்லா எமது தியாகம் முரண்பாடுகளையும், வாதங்களையும், விகார சிந்தனைகளையும் உடைத்தெறிவதோடு எதிர்காலத்தில் முரண்பாடுகளற்ற கூட்டு வாழ்க்கையை எமக்குப் பெற்றுத்தரும்.

மேலும்இ ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு புனித மக்கமாநகரம் சென்றுள்ள ஹஜ்ஜாஜ்களின் ஹஜ் கடமை அல்லாஹூதஆலாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுஇ அவர்கள் புரிந்த நியாயமான பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கும் பிரார்த்திப்போம்.

தியாகம் - இஸ்லாத்தின் ஆணிவேர்
தியாகம் - வெற்றியின் மூலமந்திரம்

ஏ.எல்.எம். அதாஉல்லா (பா.உ)
தலைவர் - தேசிய காங்கிரஸ்
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :