காத்:அஷ்ரப் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள2 மாடி ஒன்று கூடல் மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

பழுலுல்லாஹ் பர்ஹான் -

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கோட்டத்திலுள்ள பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள இரண்டு மாடி ஒன்று கூடல் மண்டபத்துடன்; கூடிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 10-10-2014 இன்று வெள்ளிக்கிழமை பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபர் கே.எல்.ஏ.ஹயறுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக சவூதி அரேபிய நாட்டின் அரச பிரதிநிதி யஹ்யா பின் அப்துல்லாஹ் அஸஸூஹைரீ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபிய நாட்டின் அரச பிரதிநிதி யஹ்யா பின் அப்துல்லாஹ் அஸஸூஹைரீ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் மற்றும் அதிதிகளினால் பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள இரண்டு மாடி ஒன்று கூடல் மண்டபத்துடன்; கூடிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முபாறக்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை,ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் ,காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுறுதீன் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் ,ஆசியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் 1 இலசத்து 20 நாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும் இப் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இங்கு அடிக்கல் நடப்பட்ட பாடசாலை கட்டிடத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 30 இலட்சம் ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :