சுவிட்சர்லாந்தின் ஜூரிச் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அடுத்த ஆண்டு முதல் 60,000 பிரான்குகள் வரை வரிகள் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக செலவுகள் அதிகமானதால் வரிகளை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி எதுவுமில்லை என்று சுவிஸ் கட்சியின் வலதுசாரி கட்சியை சேர்ந்த அந்த கிராமத்தின் மேயர் தெரிவித்துள்ளார்.
ஜூரிச்சில் உள்ள அந்த கிராமத்திற்கு எரித்தியாவில் இருந்து வந்த தாய் ஒருவர் தனது 7 குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.
ஆனால் நாளடைவில் அவர் செலவினங்களை தாங்க முடியாமல் தன் குழந்தைகளில் நால்வரை கிராமத்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் அந்த கிராமத்தின் மேயர் கூறுகையில், இந்த கிராமத்தின் வரிகளை 5 சதவிதம் உயர்த்த உள்ளதாகவும், இந்த சிறு கிராமத்தின் மீது இவ்வளவு சுமையை ஏற்ற மண்டல கொள்கைகள் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment