மஃரிப் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற இந்நிகழ்வு, 21 முஸ்லிம் சிவில் அமைப்புகளின் இணைப்பில், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணித் தலைவர் சாம் நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காதர் மஸ்தான், பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதி சட்டத்தரணி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர், சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன், பிரதம அமைச்சின் மேலதிக செயலாளர் அஷ்ரப் மற்றும் பலர் பங்கேற்றனர்.
2020 மார்ச் 31ஆம் தேதி, கொவிட்-19 காரணமாக உயிரிழந்த 3 மாத குழந்தை உட்பட பலர் பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டது. இறுதி சடங்குகளைச் செய்ய முடியாததாலும், அடக்கஸ்தலங்களைப் பார்வையிட இயலாமையாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனுபவித்த துயரம் இன்னும் நீடிக்கின்றது என குறிப்பிடப்பட்டது.
இதனையடுத்து, பலவந்த தகனக் கொள்கை தொடர்பாக சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணை நடத்துதல், பொறுப்புக்கூறல் உறுதி செய்தல் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், மார்ச் 31ஆம் தேதியை தேசிய நினைவு நாளாக அறிவிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களுடன் தேசிய நினைவுச் சின்னம் ஒன்றை நிறுவவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அனைத்து சமூகங்களும் ஒன்றுபட்டு நீதி, கௌரவம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் உறுதியை மீண்டும் வலியுறுத்தியதுடன், நீதிக்காக குரல் கொடுத்த உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதரவாளர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், 2027 மார்ச் 31ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த ஆண்டு நினைவு நாள் நிகழ்வு ஓட்டமாவடி மஜ்மிமா நகர் அடக்கஸ்தலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடத்தை பலவந்த தகனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னமாக மேம்படுத்தும் திட்டமும் முன்மொழியப்பட்டது.

.jpg)


.jpg)

0 comments :
Post a Comment