அஸ்ரப் ஏ சமத்-
ராஜகிரியையில் உள்ள தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாடுகள் அமைச்சில் பிரதியமைச்சர் தி. திகாம்பரம் தமது கடமைகளை இன்று காலை ஏற்றுக்கொண்டார்.
படத்தில் பிரதியமைச்சர் திகாம்பரம் அமைச்சின் செயலாளர் திருமதி விக்கிரமரத்தினவிடம் கடமையேற்புக் கடிதத்தை கையளிப்பதையும் அருகில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவையும் காணலாம்.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் - இந்த நாட்டில் முக்கியமாக மொழிப்பிரச்சினையினாலேயே இனங்களுக்கிடையே பிரச்சினைகள் தோண்றின. இந்த அமைச்சின் ஊடாக சிங்கள மொழியை தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழியை சிங்கள மக்களுக்கும் கற்றுக்கொடுப்பதற்கும் மற்றும் இனங்களுக்கிடையே ஓருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு அமைச்சர் வாசுதேவநாயக்காரவுடன் இணைந்து செயற்படப் போவதாக கூறினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment