த.நவோஜ்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் 'சஹன அருன' கடன் வழங்கும் வேலைத்;திட்டம் நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நாற்பத்தொரு பயனாளிகளுக்கு இருபது லட்சத்தி ஐம்பத்தையாயிரம் ரூபா பணம் வாழைச்சேனை கோறளைப்பற்று வாழ்வின் எழுச்சி திணைக்கள வங்கியில் வைத்து வழங்கப்பட்டது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செலாளர் திருமதி.ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான சஹன அருன திட்டத்தில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு பணத்தினை வழங்கி வைத்தார்.
இதில் வாழ்வின் எழுச்சி திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன், வங்கி முகாமையாளர் கோ.லதா, பிரதேச செயலக அதிகாரிகளும், வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment