வாகரை வெள்ளையடிமடு பிரதேசத்தில் சிறிய வெங்காய விளைச்சல் நல்ல இலாபம்



த.நவோஜ்-

வாகரை வெள்ளையடிமடு பிரதேசத்தில் சிறிய வெங்காய விளைச்சல் நல்ல இலாபத்தை தந்துள்ளதாக கால்நடை மற்றும் விவசாயத்தில் நெடுங்காலமாக ஈடுபட்டு வரும் இளம் விவசாயி சீனித்தம்பி ரகுலேந்திரன் தெரிவிக்கின்றார்.

பரம்பரைத் தொழிலாக இது உள்ள படியால் தனது வீட்டில் செய்து வரும் வெங்காய செய்கையின் மூலம் விளைச்சல் வருடா வருடம் நல்ல இலாபத்தைத் தருவதாகவும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊக்குவிப்புக்களும், உதவிகளும் கிடைக்கும் பட்சத்தில் இன்னும் அதிகமாக சாதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேசத்தில் கடும் வரட்சி, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்;ட போதும் தனது முயற்சியால் நல்ல விளைச்சலைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் இளம் விவசாயியான சி.ரகுலேந்திரன் சந்தோசம் ததும்ப அவர் மேலும் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேசத்தில் விவசாய முயற்சியில் ஈடுபடுவோர் இவரை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட்டால் மென்மேலும் வெங்காய விளைச்சலை வாகரைப் பிரதேசத்தில் மெருகூட்டிக் கொள்வதற்கு ஏதுவாக அமையும்.

இவரால் பயிரிடப்பட்ட சிறிய வெங்காயம் நாற்றுக்காக பிடுங்கி குவிக்கப்பட்டு காணப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :