மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் துஆப் பிரார்த்தனை நிகழ்வு

எம்.எம்.ஜபீர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், சவூதி தூதுவராலய பொதுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர் ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன் வைபவமும், துஆப் பிரார்த்தனையும் சம்மாந்துறையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை மாநகர உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவருமான ஏ.எம்.அப்துல் மஜீட் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை தப்லீஹூல் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.சீ.ஏ.எம்.புஹாரி (மௌலவி), சம்மாந்துறை உலமா கங்கிரஸ் உறுப்பினர்கள், உலமாக்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த போரளிகள், பொதுமக்கள், புத்திஜீவிகள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :