சில ஊடகங்கள் அரசாங்கத்திற்கு விரோதமாக செயற்படுகிறது-சுசில் பிரேமஜயந்த

சில ஊடகங்கள் அரசாங்கத்திற்கு விரோதமாக செயற்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக மக்களுக்கு எடுத்தியம்பும் போலிப் பிரச்சாரத்தில் சில ஞாயிறு பத்திரிகைகள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களின் பின்னணியில் சில வங்குரோத்து அடைந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மத்திய வங்கியின் புள்ளி விபரங்களையும் திரிபுபடுத்தி வெளியிட முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணம் தொடர்பில் சில அரசியல்வாதிகள் சில ஊடகங்களும் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், இந்த சவால்களை வெற்றி கொண்டு ஊவா மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை மீளக் கைப்பற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :