காஸாவில் பலியான குழந்தைகளின் பிரேதங்களை ஐஸ்கிரீம் ப்ரீஸரில் பாதுகாக்கும் அவலம்

பிரேதங்கள் அழுகிப் போவதை தடுக்க போதிய குளிர்சாதனப் பெட்டி வசதி இல்லாததால் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான குழந்தைகளின் பிரேதங்களை ‘ஐஸ் கிரீம் ப்ரீஸ’ரில் வைத்து பாதுகாக்கும் அவலம் கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கும் விதமாக உள்ளது. 

காஸாவில் உள்ள ரஃபா நகரின் பல பகுதிகளின் மீது இஸ்ரேலின் விமானப் படையும், தரைப் படையும் நடத்திய தாக்குதலில் அந்நகரில் உள்ள நஜ்ஜார் ஆஸ்பத்திரி இடிந்து தரைமட்டமாகியது. 

இதற்கிடையே, இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் பலியானவர்களை அடக்கம் செய்ய கூட இடைவெளி அளிக்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிரேதங்களை அழுகிப் போகாமல் பாதுகாக்க வேறு வழியின்றி தவிக்கும் மக்கள், தாக்குதலில் பலியான பிஞ்சு குழந்தைகளின் பிரேதங்களை ‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸர்’களில் வைத்து பாதுக்கும் அவலக் காட்சி நிறைந்த புகைப்படங்களை காஸாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :