அதிக விபத்துக்களை ஏற்படுத்தும் மீனோடைக்கட்டு பகுதியில் வீதித்தடை

சுலைமான் றாபி-


அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் அண்மைக்காலமாக அதிக வீதி விபத்துக்கள் இடம்பெற்றுவந்தன. 

அந்த வகையில் தொடர்ச்சியாக விபத்துக்களை தடுக்கும் பொருட்டு கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பாதையின் இரு மருங்கிலும் வேகத்தடைகள் (Speed Breaker) தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எச்.எம். நாளிரின் மேற்பார்வையின் கீழ் இடப்பட்டு வருகின்றது. 

இதன் மூலம் இவ்வீதியால் பிரயாணம் செய்யும் சாரதிகள் குறிப்பிட்ட இந்த இடத்தில் தங்களின் வாகன வேகத்தினைக் குறைத்து பயணம் செய்து விபத்துக்களை தவிர்த்துக் கொள்ள முடியுமென கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :