அபூ இன்ஷாப்-
சம்மாந்துறைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் எற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று (16) பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர்களான எம்.எம்.நஸீர், எம்.ஐ.எம்.தௌபீக், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலிம், உட்பட உலமாசபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
இந்த இப்தார் நிகழ்வில் மௌலவி எம்.ஐ.எம்.ஹுசைனுதீன் றியாலி அவர்களின் சிறப்பு பயான் நிகழ்த்தப்பட்டதுடன் மௌலவி யூ.எல்.மஹ்றூப் மதனி அவர்களினால் துஆப் பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment