சட்டவிரோத பாலைமரக் குற்றிகள் லொறியுடன்- வாழைச்சேனையில் சம்பவம்

த.நவோஜ்-

வாழைச்சேனை பொத்தானை புகையிரத கடவைக்கு அருகில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாலைமரக் குற்றிகளை லொறியுடன் வியாழக்கிழமை கைப்பற்றியதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொத்தானை காட்டுப் பகுதியிலிருந்து ஓட்டமாவடியிலுள்ள மர ஆலைக்கு இந்த மரக் குற்றிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்போது பொத்தனை புகையிர கடவைக்கு அருகில் பொலிஸாரை கண்ட லொறி சாரதி லொறியை விட்டு தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
18 தொடக்கம் 20 அடி நீளமான பாலை மரக் குற்றிகள் 20 உள்ளன. இவற்றின் பெறுமதியை மதிப்படுவதற்கு வனவளத் திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :