தென்கிழக்கு கலை இலக்கிய வாதிகளின் ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்

எம்.வை.அமீர்-

க்ஸ்டோ மீடியா நெட்வேர்க் அமைப்பும் இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய முற்போக்கு மன்றமும் இணைந்து எதிர்வரும் 18-07-2014 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது மல்ஹருல் சம்ஸ் மகா வித்தியாலயத்தில் அல்ஹாஜ் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில், கலா பூசணங்களான ஹசன் மௌலானா யூ.எல்.ஆதம்பாவா, எஸ்.முத்துமாறன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கவிஞர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் அவர்களும் அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறையைச் சேர்ந்த றமீஸ் அப்துல்லாஹ், ஏ.எfப்.எம்.அஸ்ரப் ஆகியோரோடு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளின் ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி தாசீம் அஹமது அவர்களும் இளம் எழுத்தாளர்கள் சார்பில் நவாஸ் சௌபி அவர்களும் கலந்து உரையாற்ற உள்ளதாகவும் வசந்தம் FM நிகழ்ச்சி முகாமையாளர் எம்.எல்.பங்கு பற்றுதலுடன் இடம்பெற உள்ளதாகவும் எமது செய்திச்சேவைக்கு குறித்த அமைப்புகளின் சார்பில் மருதூர் ஏ.அன்சார் JP அவர்கள் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :