இராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாண முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரன் துறக்கப் போவதாக இலங்கையின் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
எனினும், இவ்வாறான ஓர் கருத்தை தாம் முன்வைக்கவில்லை என விக்னேஸ்வரன் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
வட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீளவும் ஐந்து ஆண்டு காலம் பதவியில் அமர்த்தியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு விக்னேஸ்வரன் பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறு தாம் யாரிடமும் பதவி விலகுவது குறித்து அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த வாரத்தில் ஆராயந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment