இராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை-முதலமைச்சர் சீ.வீ

ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரன் துறக்கப் போவதாக இலங்கையின் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

எனினும், இவ்வாறான ஓர் கருத்தை தாம் முன்வைக்கவில்லை என விக்னேஸ்வரன் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

வட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீளவும் ஐந்து ஆண்டு காலம் பதவியில் அமர்த்தியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு விக்னேஸ்வரன் பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறு தாம் யாரிடமும் பதவி விலகுவது குறித்து அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த வாரத்தில் ஆராயந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :