பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் சொந்த நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபா நிதி உதவி

பைஷல் இஸ்மாயில்-

புனித றமழானை முன்னிட்டு பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் சொந்த நிதியிலிருந்து பாலமுனை பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல் மற்றும் மத்ரஸாக்களுக்கு ரூபா 2 இலட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பாலமுனை உசைனியா நகர் பள்ளிவாயல் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்நிகழ்வு பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவர் எஸ்.எல்.சுலைமாலெப்பை தலைமைதாங்கி நடாத்தி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சதாத் உள்ளிட்ட உறுப்பினர்களும், உலமாக்களும் கலந்து கொண்டு பாலமுனை பிரதேசத்திலுள்ள 15 பள்ளிவாயல்களுக்கும் மத்ரஸாக்களுக்கும் இந்த 2 இலட்சம் ரூபா நிதியினை வழங்கி வைத்;தனர்.

இம்முறை பாலமுனை பிரதேசத்தில் மௌவியாகவும், ஹாபிழ்களாகவும் வெளியான மாணவர்களுக்கும் ஒரு தொகை நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களாக பாலமுனை பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல் மற்றும் மத்ரஸாக்களுக்கு இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமையும், கடந்த வருடம் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் இல்லத்தில் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டு வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :