எகிப்தில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவித்து, அல் ஜெஸீரா நிறுவனத்தின் மூன்று செய்தியாளர்களை எகிப்து அரசாங்கம் கைது செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் பீட்டர் கிறீஸ்ட், எகிப்தின் முஹமட் பஃமி மற்றும் பஹீர் முஹமட் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் டிசம்பரில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டது முதல் சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்த வழக்கு சர்வதேசத்தின் பெரும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளது.
இவர்களின் விடுதலை தொடர்பில் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலிய பிரதமரால் எகிப்திய ஜனாதிபதி அப்துல் பதாஃ சிசிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையும் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

0 comments :
Post a Comment