56மில்லியன் ரூபா செலவில் அம்பாறை – நாமல் ஓயா குடிநீர் விநியோக திட்டம்




சலீம் றமீஸ்-
நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் ஜெய்கா திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிழக்கு மாகாண குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் 56மில்லியன் ரூபா செலவில் அம்பாறை – நாமல் ஓயா அம்பகஹவெல்ல பிரதேசத்திற்கான பிரதான குடி நீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாமல் ஓயா பிரதேச சபையின் தவிசாளர் பாலித புஸ்பகுமார தலைமையில் இடம் பெற்ற இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் திணேஷ் குணவர்த்தன கலந்து கொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிறியானி விஜய விக்ரம, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,வீடமைப்பும் நிர்மாணமும்,கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்;.எஸ்.உதுமாலெப்பை, தேசிய நீர்வழங்கும் சபையின் நிரைவேற்றுப் பணிப்பாளர் நிமால் பியரத்ன, பிராந்திய முகாமையாளர் ஐ.எல்.ஹைதர் அலி உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், மதகுருமார்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :