அளுத்க விவகாரம்: விசாரணை மேற்கொள்வதற்காக 15 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

ளுத்கமை, பேருவளை, வெலிப்பென்ன மற்றும் மத்துகம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மேலும் 15 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்துள்ளது.

முன்னதாக, வன்முறைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கொழும்பு குற்றபுலனாய்வு திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு உள்ளிட்ட 5 விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. 

எனினும், விரைவாக விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை இனங்காண்பதற்காக புதிதாக மேலும் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் மொத்தமாக 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய 35 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய ஏனைய நபர்களை கைது செய்வதற்கான வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பின், அவற்றை பொலிஸாரிடம் வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :