சண்டையிட்டால் ’தலையில் குத்துவேன்’ - போலார்ட்டை மிரட்டிய கெய்ல்



மு
ம்பை-பெங்களூர் போட்டிகளின் போது மோதலில் ஈடுபட்ட போலார்ட்டிடம், ’தலையில் குத்துவேன்’ எனக்கூறி கெய்ல் அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் கடந்த 6ம் திகதி மும்பையில் நடந்த ஆட்டத்தில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி வேகப்பந்து வீரர் ஸ்டார்க், மும்பை அணியின் துடுப்பாட்டக்காரர் போலார்ட், ஆடுகளத்தில் மோதிக் கொண்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

போல்லார்ட்டை நோக்கி ஆத்திரத்தில் ஸ்டார்க் பந்தை எறியும் விதமாக வீசினார். பதிலுக்கு போலார்ட் பேட்டை வேகமாக வீசினார். நல்ல வேளையாக பேட் தரையில் விழுந்தது.

ஸ்டார்க் – போல்லார்ட் மோதலின் போது பெங்களூர் அணியில் விளையாடும் மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெய்ல் தனது நாட்டை சேர்ந்த போல்லார்டை சமாதானம் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ஆட்டத்தில் ஏற்பட்ட தீவிரம் காரணமாக இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. மோதலின் போது நான் பொல்லார்ட் அருகே வந்து ‘உனது தலையில் குத்துவேன்’ என்று கூறினேன். பிறகு அவர் அமைதியானர்.

பெங்களூர் அணி தற்போது பின் தங்கிய நிலையில்தான் இருக்கிறது. ஆனால், வாய்ப்பை இழந்து விடவில்லை. இனிவரும் ஆட்டங்களில் நன்றாக விளையாடுவோம்.

டிவில்லியர்சின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முன்னேறுவோம் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :