கடமையை செய்யத் தவறிய மூன்று பொலிஸார் பணி நீக்கம்

சாலியவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தில் கடமையை செய்யத் தவறிய குற்றச்சாட்டில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் சாலியவெவ - வீரபுர பகுதியில் இருப்பதாக 21ம் திகதி தகவல் கிடைத்தது. 

அதன்பின் குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் மாலையே தப்பிச் சென்றுள்ளார். 

இராணுவ வீரர் தப்பிச் சென்ற சமயத்தில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :