மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் வீதி விபத்து : படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் - படங்கள்

நஸீப் முஹம்மட்-
ட்டக்களப்பு தாண்டவன்வெளி ரெலிகொம் சந்தியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் பைசிக்கிளில் பிரையாணம் செய்துகொண்டீருந்தபோது சிறு உழவுஇயந்திரத்தில் மோதுப்பட்டு கட்டுப்பாடடை இழந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டீருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதினால் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டமாவடியைச் சேர்ந்த முகமட் நஸீர் வயது (24) என்பவரே வலதுகால் உடைந்த நிலையில் சத்திர சிகிட்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதிப் போக்குவரத்து பொலிசார் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக் வழமையான பாதுகாப்பு கடமையில் இருந்த சந்தியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டுள்ளனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :