நடிகை ஹன்சிகா கையை பிடித்து இழுத்து ரசிகர்கள் ரகளை - படப்பிடிப்பில் பரபரப்பு

டிகை ஹன்சிகா கையை பிடித்து இழுத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. இந்த படத்தில் ஜெயப்பிரதா மகன் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். இதன் பாடல் காட்சியொன்றை கோவா கடற்கரையில் படமாக்கினர். 

சித்தார்த்தும், ஹன்சிகாவும் ஆடிப்பாடுவது போல் இந்த காட்சியை எடுத்தனர். அப்போது படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவர்கள் ஹன்சிகாவை பார்த்து விசிலடித்தபடி நின்று கொண்டு இருந்தனர். திடீரென்று கூட்டத்தினர் ஹன்சிகாவிடம் நெருங்கி போய் ஆட்டோகிராப் கேட்டனர். சிலர் ஹன்சிகா கையை பிடித்து இழுத்து அத்துமீறினார்கள். அவர்கள் பிடியில் சிக்கி ஹன்சிகா தவித்தார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதறினார்கள்.

பாதுகாவலர்கள் விரைந்து போய் ஹன்சிகாவை முற்றுகையிட்ட கூட்டத்தினரை பிடித்து இழுத்தனர். ஹன்சிகாவை அவர்கள் பிடியில் இருந்து மீட்டார்கள். பின்னர் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தன்ர. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்த அதிர்ச்சியில் இருந்து ஹன்சிகா இன்னும் மீள வில்லை. ஏற்கனவே ஒரு முறை ரசிகர்களிடம் இது போல் சிக்கி ஹன்சிகா மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :