வில்பத்து காடு அழிந்து போவதற்கு அப்பாவி முஸ்லிம்கள் காரணம் அல்ல - ஜே.வி. பி



நா
ட்டில் உள்ள நிலங்கள், சொத்துக்கள் அனைத்து நாட்டில் வாழும் சகலருக்கு சொந்தமானது என ஜே.வி. பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், மலாயர் என யாராக இருந்தாலும் அனைவருக்கும் இவை சொந்தமானவை.

குடியிருக்கவும் காணிகள் வேண்டும்.உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் காணிகள் வேண்டும். இதனை அரசாங்கமே நிறைவேற்ற வேண்டும்.

காணியற்ற மக்களுக்கு காணியை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இதனை நிறைவேற்ற வேண்டும்.

சரியான முறையில் காணிகளை மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

வில்பத்து வனம் அழிந்து போகிறது என்றால் அதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டுமே அன்றி அப்பாவி முஸ்லிம் மக்கள் அல்ல.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காது முஸ்லிம் மக்களுக்கோ வேறு நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் பிரயோசனமில்லை.

பாதுகாக்கப்பட வேண்டிய நிலங்களை பாதுகாத்து கொள்வது போல் காணியற்றவர்களுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் லால் காந்த கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :