அவர் மேலும் கூறுகையில்,
சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், மலாயர் என யாராக இருந்தாலும் அனைவருக்கும் இவை சொந்தமானவை.
குடியிருக்கவும் காணிகள் வேண்டும்.உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் காணிகள் வேண்டும். இதனை அரசாங்கமே நிறைவேற்ற வேண்டும்.
காணியற்ற மக்களுக்கு காணியை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இதனை நிறைவேற்ற வேண்டும்.
சரியான முறையில் காணிகளை மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
வில்பத்து வனம் அழிந்து போகிறது என்றால் அதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டுமே அன்றி அப்பாவி முஸ்லிம் மக்கள் அல்ல.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காது முஸ்லிம் மக்களுக்கோ வேறு நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் பிரயோசனமில்லை.
பாதுகாக்கப்பட வேண்டிய நிலங்களை பாதுகாத்து கொள்வது போல் காணியற்றவர்களுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் லால் காந்த கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment