சந்திரிக்கா பொது வேட்பாளராக வருவதை ஆதரிக்கும், மஹிந்த ராஜபக்ஸவின் தந்திரம் ..!





JM-
டந்த சில தினங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி மாளிகைக்கு சில அமைசர்கள் ஒன்று சேர்ந்து சென்றிருந்தார்கள். அவர்கள் ஏதோ விசேட தேவைக்காக வந்திருப்பது ஜனாதிபதிக்குப் புரிந்தது. என்ன இன்று எல்லோரும் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறீர்கள் ஏதேனும் விசேடங்களோ என்று ஜனாதிபதி பேச்சுக் கொடுக்க ....!

இல்லை .. இல்லை .. ஜனாதிபதி அவர்களே இந்த நாட்டில் மதங்களிடையே இனக்கப்பாடு பற்றி கேள்விகள் எழுப்பப்டுகின்றது என்று அவர்கள் கூற. பைத்தியம் .. பைத்தியம் .. யார் அப்படிச் சொல்வது? இங்கு நாங்கள் போகின்ற இடங்களில் எல்லாம் சகல சமயத் தலைவர்களும் ஒரே மேடையில் ஒற்றுமையாகத்தானே அமர்ந்திருக்கின்றார்கள், என்று அவர் கூற போயிருந்த அமைச்சர்கள் இல்லை ஜனாதிபதி சந்திரிக்கா பொது வேட்பாளர் என்று ஒரு பேச்சு அடிபடுகின்றது ...!

அப்படி நேரடியாக விடயத்திற்கு வாருங்கள். நானும் சந்திரிக்கா பொது வேட்பாளராக வருவதைப் பெரிதும் ஆதரிக்கின்றேன், என்று ஒரு போடு போட்டார். அமைச்சர்களுக்கு ஒன்றும் புரிய வில்லை அவர்கள் மௌமாக சில நிமிடங்கள் இருக்க, மீண்டும் அந்த மௌனத்தை களைத்த ஜனாதிபதி என்ன எதுவுமே பேசாமல் இருக்கின்றீர்கள்.

சந்திரிக்கா அப்படி வேட்பாளராக வந்தால்தான் எனக்கு இரு தோனியில் பயணம் செய்கின்றவர்களை இனம் கண்டு கொள்ள முடியும். அதன் பின்னர் நடவடிக்கை எடுப்தற்கு அது எனக்கு உதவும். அப்போது எனக்கு எதிர்காலத்தில் என்னுடன் இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் இனம் கண்டு கட்சியை சீரமைக்க முடியும். எனவேதான சந்திரிக்காவின் வரவு எனக்கு உதவியாக இருக்கும் என்று அந்த அமைச்சர்களிடத்தில் கூறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :