ஏசியா பவுண்டேசனின் ஏற்பாட்டில் கல்முனைமாநகர சுகாதாரதுறை சார்ந்தோருக்கான செயலமர்வு- படங்கள்

எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுடீன்-

ஏசியா பவுண்டேசனின் ஏற்பாட்டில் கல்முனைமாநகர சுகாதாரதுறை சார்ந்தோருக்கான செயலமர்வு கல்முனை மாநகரசபையின் பிரதம வைத்தியர் எம்.சீ.மாஹீர் தலைமையில் சாய்ந்தமருது சீ ப்பிரீஸ் ஹோடேல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இங்கு கல்முனை மாநகரசபை எதிர்நோக்கும் சுகாதார ரீதியிலான பிரட்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. தின்மக்கழிவு முகாமைத்துவம் மடுவம் தொடர்பான கருத்தாடல்கள்,சில துறைகளை தனியார் மயப்படுத்துவது தொடர்பான கருத்துப்பரிமாறல்கள், கல்முனை மாநகரசபையில் பணிபுரியும் சுகாதாரத்துறை சார்ந்த ஊழியர்களை வலுவுட்டுதல் சம்மந்தமான கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

ஏசியா பவுண்டேசனின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களது வளிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஜே.லியாக்கத், கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் மற்றும் எம்.ஏ.சீ.நஜீப் (டீ.டீஃஈ.பீ. சீ.ஈ.ஏ.அம்பாறை),எம்.ஐ.எம்.ஜெசூர் (திட்ட பணிப்பாளர் சீ.சீ.டீ )எம்.ஐ.அப்துல் மஜீத்.சுகாதார வைத்தியர் கே.எல்.எம்.ரயீஸ்இஎம்.எம்.முர்ஷிதா (யூ.டீ.ஏ.) எம்.சீ.முனீர் (யூ.டீ.ஏ.) போன்றோருடன் கல்முனை மாநகரசபை முதல்வர் நிஸாம் காரியப்பரது பிரத்தியோக செயலாளர் ரீ.எல்.எம்.பாருக்கும் கலந்து கொண்டதுடன் கல்முனை மாநகரசபையின் சுகாதார துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :