அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கு வருகை தந்த சவூதி அரேபிய தூதுக்குழுவினர்-படங்கள்
















எம்.பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ்-


கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீரின் அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவின் பிரபல முதலீட்டுக் கம்பனியின் முக்கியஸ்தர்கள் அடங்கி தூதுக் குழுவினர் கிழக்கு மாகாணத்திலுள்ள பல முக்கிய இடங்களை பார்வையிட்டனர்.

அப்துல் றஊப் அல் - இஸாயி தலைமையில் வருகை தந்த குழுவினர் இன்று (2014.03.04) அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு வருகை தந்து அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினர்.

கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர், அட்டாளைச்சேனை உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.அப்துல் முனாப், எம்.ஐ.பாரீன், என்.எல்.யாசீர் ஐமன், ஏ.எல்.றியாஸ் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடல் முடிவுற்றதன் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட தென்கிழக்கு அறபிக் கல்லூரி, ஒலுவில் துறைமுகம் போன்ற முக்கிய இடங்களை பார்வையிட்டு இவ்விடயம் தொடர்பில் பல்வேறு துறைகளுக்கான முதலீட்டு நடவடிக்கைகளுக்குரிய ஆலோசனைகளும் இதன்போது பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :