எம்.பைஷல் இஸ்மாயில்-
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மக்கள் வங்கி கிளையின் பிரதி முகாமையாளர் ஏ.ஜி.நிசாம் தலைமையில் எற்பாடு செய்யப்பட்ட தேசிய சுதந்திர தின நிகழ்வில் இன்று பிறந்த பிள்ளைகளுக்கு பரிசில் மற்றும் பண வவுச்சர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரத அதிதியாக மக்கள் வங்கியின் அம்பாறை மாவட்ட உதவிப் பிராந்திய முகாமையாளர் அலியார் சம்சுதீன் மற்றும் வங்கியின் முகாமையாளர் ஏ.ஜி.நிசாம், அட்டாளைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்களான எஸ்.எம்.ஏ.ஜவாத், மேகராஜினி, எம்.ஐ.எம்.நபீல் ஆகியோர் பரிசில் மற்றும் பண வவுச்சர்களை வழங்கி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment