சுலைமான் றாபி-
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தினையொட்டி இன்று (04.02.2014) நிந்தவூரின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளை ஏற்பாடு செய்த பிரதான நிகழ்வு அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும், அதனைத்தொடர்ந்து நிந்தவூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வு அதன் அலுவலக வளாகத்திலும், அதனைத்தொடர்ந்து நிந்தவூர் பிரதேச சபையிலும் , மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையிலும் இடம்பெற்றன.
இதேவேளை இந்த சுதந்திர நிகழ்வின் சிறப்பம்சமாக பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட சுதந்திர தின ஊர்வலமும் இந்நிகழ்வுகளை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இந்த சுதந்திர நிகழ்வின் சிறப்பம்சமாக பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட சுதந்திர தின ஊர்வலமும் இந்நிகழ்வுகளை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :
Post a Comment