ஜனாதிபதி மஹிந்தவுடன் சென்று டுபாய் விமானநிலையத்தில் கமெரா திருடியவர் பணிநீக்கம்

னா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் சென்று டுபாய் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் கமெரா திருடிய உத்­தி­யோ­க­பூர்வ புகைப்­ப­டப்­பி­டிப்­பாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார்.

தென்­னா­பி­ரிக்கா மற்றும் கென்­யா­வுக்கு தனது விஜயம் மேற்­கொண்ட ஜனா­தி­பதி மகிந்த, நாடு திரும்பும் போது இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

டுபாய் விமான நிலை­யத்தில் ஜனா­தி­பதி ஓய்­வெ­டுத்துக் கொண்­டி­ருந்­த­போது, அவ­ரது ஊடகக் குழுவில் இடம்­பெற்­றி­ருந்த படப்­பி­டிப்­பாளர் நான்கு இலட்சம் ரூபா­வுக்கும் அதிக பெறு­ம­தி­யான கமெரா ஒன்­றினைத் திரு­டி­யுள்ளார்.

தனது பையினுள் மறைத்துக் கொண்டு செல்ல முற்­பட்­ட­போது, விமான நிலை­யத்தில் இருந்த கமெரா மூலம் பாது­காப்பு அதி­கா­ரிகள் அவ­தா­னித்­துள்­ளனர்.

உடனே குறித்த படப்­பி­டிப்­பா­ளரைக் கைது செய்த அதி­கா­ரிகள், விசா­ரணை செய்­துள்­ளனர். குறித்த நபர், ஜனா­தி­ப­தியின் குழுவில் இடம்­பெற்­றி­ருந்­தவர் என தெரி­ய­வந்­ததும் அவரை எச்­ச­ரித்து ஜனா­தி­ப­திக்கு மதிப்­ப­ளிப்­ப­தா­கக் கூறி விடு­தலை செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த படப்பிடிப்பாளர் நாடு திரும்பியதும் பணியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :