-எம்.ரீ.எம்.பர்ஹான்-
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில்; வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபள்யூ.எம்.சமீம் மற்றும் ஒரு சத்திர சசிகிச்சை செய்து சாதனை படைதுள்ளார்.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு செய்யப்பட்ட சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சிறுநீரகத்தில் இருந்து 35 சிறிய சிறுநீரகக் கற்களை அகற்றி டாக்டர் சமீம் சாதனைபடைத்துள்ளார்.
அதே தினத்தில் இன்னுமொருவருக்கு செய்யப்பட்ட மற்றுமொரு சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது பெரிய அளவிலானா மற்றுமொரு சிறுநீரகக் கல்லையும் டாக்டர் சமீம் அகற்றியுள்ளார்.
சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சிறு நீரகக் கல்லில் ஒன்று மான்கொம்பு வடிவில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த நோயாளியின் குருதி (0-)வகையானதாக இருந்ததாகவும், இந்த வகையான குருதியை அம்பாரை மாவட்ட வைத்தியசாலைகளில் பெறுவது மிகவும் கடினமா இருந்தால் அம்பாரை வைத்திய சாலையில் இருந்து பெறப்பட்ட ஒரு பைந் குருதியை நம்பியே இந்த சத்திர சிகிச்சையை செய்யப்பட்டதாகவும் டாக்டர் சமீம் தெரிவித்தார்.
மேலும் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் மயக்க மருந்தேற்றல் நிபுணரின் பூரண ஒத்தழைப்புடன் இந்த சிறு நீரக சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாகவும், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில்; வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபள்யூ.எம்.சமீம் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment