பம்பலப்பிட்டிய முஸ்லிம் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன இன்று கைது செய்யப்பட்டார்.
பொரலஸ்கமுவ பெப்பிலியான பிரதேச வீடொன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று அதிகாலை அவரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் புத்திக சிறிவர்தன விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
குறித்த கொலை வழக்கில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment