அடிக்கடி தடைபடும் மின்சாரத்தினால் உ/த மாணவர்களுக்கு பெரும் சவால்


லையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்ற அதேவேளை உ/த பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்த மழைக்காரணமாக பிரதேசத்தில் உள்ள பாதைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் பயணம் செய்யவேண்டிய மாணவர்கள் உரிய நேரத்தில் பரீட்சைக்கு சமூகமளிப்பதில் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

அதேப்போல் பெய்துவரும் தொடர்ச்சியான மழைக்காரணமாக பிரதேசத்தில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து விழுவதாலும் மின்சார கம்பிகள் அறுந்து விழுவதாலும் அடிக்கடி மின்தடையினை இப்பிரதேச மக்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது.

இதனால் இப்பிரதேசத்திலிருந்து க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாந்தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மற்றும் தயாராகும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவதோடு தமது பரீட்சை பெறுபேறுகளை இது பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

மின்தடை குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்களும் பெற்றோரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :