38 வயதுடைய பெண் மீது சீருடை அணிந்த இருவரால் பாலியல் பலாத்காரம்.

கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செய­ல­கப்­ பி­ரிவில் வினா­சி­யோடை கிரா­மத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் ஒருவர் பலாத்­கா­ரத்­திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

38 வயதுடைய இந்தப் பெண் மீது சீருடை அணிந்த இருவரே பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளனர். தனது குடும்ப வருமானத்திற்காக பனையோலையில் பொருட்கள் செய்து விற்கும் இந்தநப் பெண் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வழமைபோன்று பனை ஓலை எடுப்பதற்காக சென்றவேளையில் சீருடை அணிந்த இருவர் தமது முகங்களை துணியால் மறைத்துக்கட்டியிருந்த நிலையில் பெண் மீது பலாத்காரம் புரிந்த பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து கடும் இரத்தப் போக்குடன் பூநகரி வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்ட இப் பெண் இரத்தப் போக்கு கட்டுப்படாத நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :