ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பத்திரிகை ஆசிரியர்கள் மாதாந்தம் நடத்தும் காலைநேர சந்திப்பின்போது பத்திரிகை ஆசிரியர்கள் கடுமையான கேள்விகளை ஒருபோதும் எழுப்புவதில்லை. நான் உட்பட பத்திரிகை ஆசிரியர்கள் இவ்வாறு கடுமையான கேள்விகளை எழுப்புவதில்லை.
அங்கு காலை உணவு வழங்கப்படுகின்றது. காலை உணவு சந்திப்பு என்றே அதனை கூறுவோம். எனினும் சந்திப்பில் கடுமையான கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. குறிப்பாக பிரபல அமைச்சர் ஒருவரின் செயற்பாடுகள் மற்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்து இருப்பது குறித்து எந்தவொரு கேள்வியும் நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவரான ஜனாதிபதியிடம் கேட்கப்படுவதில்லை.
இன்று பாராளுமன்றத்தில் கூட எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மாதக்கணக்கில் கால அவகாசம் கேட்கப்படுகின்றது. சுதந்திரத்தின் பின்னர் எமது நாட்டின் பாராளுமன்றத்தில் மிகவும் கண்ணியமான எம்.பி. க்கள் இருந்தனர். இன்று அந்த நிலைமை காணாமல் போய்விட்டது.
இலங்கையில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய இதற்கான முயற்சிகளை எடுத்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்றார்.(vk)
எமக்கு தைரியம் போதாமையே இதற்கான காரணமாகும் என்று கருதுகின்றோம் என பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஞாயிறு தி ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியருமான மெனிக் டி. சில்வா தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமையானது நல்லிணக்கத்துக்கான ஒரு மார்க்கமாகும் என்ற தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகை நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர் ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கை பத்திரிகை நிறுவனம் அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
மெனிக் டி. சில்வா நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில்,
பத்திரிகையாசிரியர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரங்களுக்கு ஒரு முறை சந்திப்பது வழக்கமாகும். இவ்வாறான சந்திப்புக்களின்போது பத்திரிகையாசிரியர்கள் கடுமையான கேள்விகளை கேட்பதில்லை. இந்த கலாசாரம் மாறவேண்டும்.
உண்மையில் ஏன் இவ்வாறு பத்திரிகையாசிரியர்கள் ஜனாதிபதியிடம் கேள்விகளை கேட்பதில்லை என்ற கேள்விக்குத் தைரியம் இல்லை என்றே பதிலளிக்கவேண்டியுள்ளது. நான் உட்பட பத்திரிகையாசிரியர்கள் ஜனாதிபதியிடம் கடுமையான கேள்விகளை கேட்பதில்லை.
தகவல் அறியும் உரிமையானது நல்லிணக்கத்துக்கான ஒரு மார்க்கமாகும் என்ற தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகை நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர் ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கை பத்திரிகை நிறுவனம் அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
மெனிக் டி. சில்வா நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில்,
பத்திரிகையாசிரியர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரங்களுக்கு ஒரு முறை சந்திப்பது வழக்கமாகும். இவ்வாறான சந்திப்புக்களின்போது பத்திரிகையாசிரியர்கள் கடுமையான கேள்விகளை கேட்பதில்லை. இந்த கலாசாரம் மாறவேண்டும்.
உண்மையில் ஏன் இவ்வாறு பத்திரிகையாசிரியர்கள் ஜனாதிபதியிடம் கேள்விகளை கேட்பதில்லை என்ற கேள்விக்குத் தைரியம் இல்லை என்றே பதிலளிக்கவேண்டியுள்ளது. நான் உட்பட பத்திரிகையாசிரியர்கள் ஜனாதிபதியிடம் கடுமையான கேள்விகளை கேட்பதில்லை.
இதற்கு நாங்கள் வெட்கப்படவேண்டும். நானும் அந்த சந்திப்புக்களில் கலந்துகொள்கின்றேன். ஆனால் எனக்குக்கூட அவ்வாறு கடுமையான கேள்விகளை கேட்கத் தோன்றுவதில்லை.
அங்கு காலை உணவு வழங்கப்படுகின்றது. காலை உணவு சந்திப்பு என்றே அதனை கூறுவோம். எனினும் சந்திப்பில் கடுமையான கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. குறிப்பாக பிரபல அமைச்சர் ஒருவரின் செயற்பாடுகள் மற்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்து இருப்பது குறித்து எந்தவொரு கேள்வியும் நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவரான ஜனாதிபதியிடம் கேட்கப்படுவதில்லை.
இன்று பாராளுமன்றத்தில் கூட எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மாதக்கணக்கில் கால அவகாசம் கேட்கப்படுகின்றது. சுதந்திரத்தின் பின்னர் எமது நாட்டின் பாராளுமன்றத்தில் மிகவும் கண்ணியமான எம்.பி. க்கள் இருந்தனர். இன்று அந்த நிலைமை காணாமல் போய்விட்டது.
இலங்கையில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய இதற்கான முயற்சிகளை எடுத்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்றார்.(vk)
