சென்னை ஐகோர்ட்டில் இளவரசனுக்காக வாதாடியவர் வக்கீல் ரஜினிகாந்த் ஆவார். அவர் இன்று தர்மபுரி யில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர், ’’இளவரசன் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்து இருந்ததாகவும் போலீசார் கூறுகிறார்கள்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக வைத்துக் கொண்டாலும் அவரிடம் இருந்து திவ்யாவை பிரித்து இளவரசனின் சாவுக்கு காரணமாக பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் மற்றும் இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளவரசனின் பிணத்தை நாங்கள் அறிவிக்கும் டாக்டர்கள் முன்னிலையில் மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் இன்று மூத்த வக்கீல் பிரசாத் மனு தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை பெற்று இளவரசனின் பிரேதம் மறு பரிசோதனை செய்யப்படும்’’என்று கூறினார்.
இளவரசனின் பிணத்தை நாங்கள் அறிவிக்கும் டாக்டர்கள் முன்னிலையில் மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் இன்று மூத்த வக்கீல் பிரசாத் மனு தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை பெற்று இளவரசனின் பிரேதம் மறு பரிசோதனை செய்யப்படும்’’என்று கூறினார்.

0 comments :
Post a Comment