யாரிடம் சொல்லலாம் என் நிலைமையினை என்கிறார் பொத்துவில் பி.ச. தவிசாளார்

டந்த 24 வருடமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்காக உளைக்கும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.வாசித் அவர்கள் தனது உளக்குமுறளை இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது தான் 2011 இல் இருந்து லௌகல பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக (பொத்துவில் இருந்து 16 கி.மீ. தூரத்தில்) பணிபுரிவதாகவும் பொத்துவில் பிரதேசசபைக்கு அதிகூடிய சாதனை வாக்குகளைப் பெற்று  தவிசாளராக கடையேற்று இன்றுடன் இரண்டு வருடம் கடந்த நிலையிலும் இன்னும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளும் செய்து கொண்டிருப்பதால் பல தடவைகள் இடமாற்றத்திற்க்கு முயற்சித்தும் இன்னும் பலனளிக்கவில்லை.

 கட்சியிடம் முறையிட்டும் கட்சியில் 2 அமைச்சர்கள்.
 8 பாராளுமன்ற உறுப்பினர்கள்,
 7 க்கு மேற்பட்ட மாகாண சபைகளின் உறுப்பினர்கள்,
 இருந்தும் ஒருவரால் கூட  சேவை விடுவிப்பு செய்ய முடியாமல் இருப்பதனையிட்டு மிகவும் மனம்வருந்துகிறேன்.

ஊரின் சேவைகருதி பலரின் (பொத்துவில் தவிசாளரை சுடுவேன் என்று  கூறியிருக்கின்ற போதும்) எதிர்ப்புக்கு மத்தியில் இருக்கும் தான் அடர்ந்த காட்டுப்பகுதியால் கடமைக்குச்சென்று வருவது குறித்து தன்னுயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பது குறித்தும் ஆழ்ந்த கவலையினைத்தெரிவித்தார்.

மேலும் துணைத்தவிசாளர் சேவை விடுவிப்புச் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தான் ஏன் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து அவரின் குறலை இம்போட்மிரர் இணையத்திற்குத் தெரிவித்தார் பொத்துவில் பிரதேச ச்பையின் தவிசாளர் எம்.எஸ்.வாசித்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :