இன்று நள்ளிரவிலிருந்து பணி பகிஸ்கரிப்பை - கெமுனு விஜேரத்ன

ன்று (10) நள்ளிரவிலிருந்து பணி பகிஸ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன அறிவித்துள்ளார்.

இது ஒருநாள் பகிஸ்கரிப்பா அல்லது தொடர் பகிஸ்கரிப்பா என்பது குறித்து அவர் தெளிவான தகவலை வெளியிடவில்லை.

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பல கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதும் இதுவரையில் எந்தவொரு தீர்வும் கிடைக்காததால் பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானத்ததாக கெமுனு குறிப்பிட்டார்.

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து நேற்று முன்தினம் (08) ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதும் அதில் கெமுனு விஜேரத்ன கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, ரயில் தொழிற்சங்க ஒன்றியம் 48 மணிநேர பணி பகிஸ்கரிப்பை அறிவித்து அதனை ஒரு நாளில் நிறைவு செய்துள்ள போதும் ரயில் சேவைகள் இன்னும் வழமைப்போன்று இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :