அநுராதபுர நகரப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ் வண்டி ஒன்றின் சில்லுகளுக்குள் சிக்குண்டு நேற்று (07) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கமுவையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் நகரப் பகுதியில் வைத்து பஸ்ஸில் கோளாறு ஏற்பட்டு அதனை சீர் செய்துகொண்டிருக்கும் போது திடீரென பஸ் முன்நோக்கி பயணித்துள்ளது.
இந்நிலையில் பஸ்ஸிற்கு முன்பாக நின்று கொண்டிருந்த சிறுமி சில்லுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

0 comments :
Post a Comment