
ஒடிசா மாநிலம், கெயோன்ஜர் மாவட்டத்தில் உள்ள தனியா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின சிறுவன் சஞ்சய் தெஹூரி (10).
சஹார்பூரில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தான்.
கிராமத்தில் நடைபெற்ற கோயில் தேர்திருவிழாவை காண சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்த சிறுவன், விடுமுறை முடிந்ததும் மீண்டும் பள்ளிக்கு செல்ல மறுத்து விட்டான்.
அவனது தாயார் மிரட்டி வற்புறுத்தியும் தனது நிலையில் பிடிவாதமாக இருந்த அவன்,வீட்டில் உள்ள ஓர் அறைக்குள் நுழைந்து கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டான்.
உள்ளே இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ மூட்டிக் கொண்டான்.
உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
0 comments :
Post a Comment