அஹங்கம பிரதேசத்தில் பஸ் ஒன்று ஜீப் வண்டியுடன் மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (05) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் தொகை அதிகரிக்கக் கூடும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பஸ் இவ்வாறு ஜீப்புடன் மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் காலி கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment