காத்தான்குடியிலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நிதியுதவி.


-றிஸ்கான் முகம்மட்- 
ட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் நிதியுதவியில் ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தினால் அன்மையில் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மற்றும் சஊதி அரேபிய இளவரசியின் ஆலோசகர் யஹ்யா அஸீஸ், சஊதி அரேபியாவின் முக்கியஸ்த்தர் டாக்டர் ஐன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எஸ்.சியாத் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் உட்பட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடியிலுள்ள அப்றா மற்றும் ஜன்னத், ஹிஸ்புல்லா பாலர்பாடசாலைகளுக்கு தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் சுத்தமான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக தலா ஒரு குடும்பத்திற்கு ஐய்யாயிரம் ரூபா வீதம் நூறு வறிய குடும்பங்களுக்கு உதவிக்கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :