அகமட் எஸ். முகைடீன்
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது சஹ்றியன் விளையாட்டுக் கழகத்தினருக்கு ஒரு தொகுதி கடின பந்து விளையாட்டு உபகரனங்கள் நேற்று (06.06.2013) வழங்கி வைக்கப்பட்டது.
மாநகர முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி விளையாட்டு உபகரனங்கள் விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.எச்.ஜிப்றியிடம் முதல்வரினால் கையளிக்கப்பட்டது.
இதன்போது மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.நிசார்டீன் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment