பலஸ்தீனத்தில் இருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம்,அவசரமாக நாடு திரும்புகிறார்.


லஸ்தீனத்தில் நடைபெறும் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக அவசரமாக நாடு திரும்புகிறார்.

வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பான அரசியலமைப்பு திருத்தம் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதால், அதில் பங்குபற்றுவது மிகவும் அவசியமென அமைச்சர் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாலேயே உடனடியாக நாடு திரும்புவதற்கான முடிவை அவர் மேற்கொண்டார். 

அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகாரப் பகிர்வு பற்றியும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவிக்கவுள்ளார்.

அத்துடன், வியாழக்கிழமை (06) பிற்பகல் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள வட
மாகாணத்தில் வசித்து, இடம்பெயர்ந்த மக்கள் அங்கு வாக்களிப்பதற்கு வகைசெய்யும் வாக்காளர்கள் பதிவு (விஷேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மீதும் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றவுள்ளார்.

டாக்டர்.ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :